கனகவள்ளி - 9
காவல்துறை வந்தடைந்த பிறகு உயிரோடிருந்தவர்களை ஆம்புலன்சிலும், உயிரற்ற உடல்களை அமரர்ஊர்தியிலும் ஏற்றி மற்ற விதிமுறைகளையும் முடித்திருந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் ஒருவர்," சரி. என்னப்பா! என்னாச்சு? எப்டி ஆச்சுனு யாராவது சொல்றீங்களா இல்ல..." என்று இழுக்க, அப்போது குறுக்கிட்ட செல்வா, " சார்! ஆம்புலன்ஸ அனுப்பிட்டம்னா பிரச்சனையில்லை..." எனக் கூற, இன்ஸ்பெக்ட்டரோ," அட செல்வாவா! சரி! சரி!.. ஏய் ஆம்புலன்சு நீ கெளம்பு. கருப்பு வண்டி நீயும் கெளம்பு.. " என்ற போது ரகு குறுக்கிட்டு," சார் இன்னும் மூனு உடல் இருக்கு.." என்றான். இன்ஸ்பெக்ட்டரோ," இன்னும் 3 உடலா? டவுட்டா இருக்கு. போச்சா 3 ம்?. சரி. எல்லா பாடியையும் ஏத்து. வண்டி டீடெய்ல எழுதிக்கோ.. மத்த வண்டிகளை கிளியர் பண்ணு டிராபிக் சரி ஆகட்டும்" என்ற போதுதொலைதூர பேருந்து ஒன்று கடந்து சென்றது அந்த இரவில் அவர்களை. இப்போது கர்பிணியின் கணவனின் உடலையும், குழந்தையின் உடலையும் ஏற்றியவர்கள், அவளின் உடலருகில் சென்றபோது ஒரு வித நிசப்தம் உருவாகியது. காற்றும் பலமாக வீசத்தொடங்கியது. இதன