கனகவள்ளி - 11
கர்பினிப் பெண்ணின் பின்புறம் சென்ற உருவத்தைப்பார்த்து அதிர்ந்தவாறு இருந்தான் ராஜா, " யாரது....? இந்த பேயம்மாதான் இங்க இருக்கே. அப்பறம் அது யாரு..? " என்று நினைத்தவாறு கர்பிணிப் பெண் இருந்த இடத்தை நோக்கிய போது, அவளும் அங்கிருந்து மறைந்திருந்ததைக் கண்டவன் மறுபடியம் கலக்கத்திற்குள்ளானான் என்ன நடக்கிறது என்று. அதே நேரம் இடது புறமும் திரும்பி பார்த்தான் தயக்கமாக, செல்வா செல்வியின் உடல்களாவது இருக்கின்றதா! இல்லையா! என்று பார்க்க. ஆனால் அவர்கள் உடல்களும் மறைந்திருந்தன அங்கிருந்து அப்போது. இதனால் சந்தேகமடைந்தவன், " அப்போ இங்க நடந்ததெல்லாம் பொய்யா...! இருக்காது நமக்கு மண்டைல அடிபட்டுச்சே..!, இரத்தம் வந்ததே...!, அந்த புழு... புழு.. ஆஆஆ...அதுவும் காணோம்..அப்போ இரத்தம்..?" என்று யோசித்து பின்புறமாக பார்த்த போது, அங்கே இரத்தம் உறைந்திருந்ததைக் கண்டவன் " அப்போ உண்மைதான் நாம பார்த்தது.. பேயி படம் காண்பிச்சிருக்கு நமக்கு.." என்று நினைத்தவன் மேலும் ," அதுக்கு எதுக்கு நம்ம மண்டைல இரத்தம் வர்ர அளவுக்கு அடிக்கனும். ராஜா.. பார்ராரான பார்