கனகவள்ளி - 3
"அம்மா ஆஆஆ அப்பா ஆஆஆ" என்று அழுதுகொண்டேயிருந்த அந்தக் குழந்தையைப் பார்த்த கர்பிணிப் பெண் அவளருகில் வந்து சிரித்துக்கொண்டே 'அவளை அணைத்தபோது' இருவரும் மறைந்து போயினர் அவ்விடத்தை விட்டு. அதேநேரம் குடுகுடுப்பைக்காரன் ராஜாவோ, 'செட்டியார் வீட்ல உள்ள குடும்பம் என்ன ஆனதோ ' என்று நினைத்துக்கொண்டே சென்றவன், " சே! இப்டி ஒரு பிரச்சனைல நாம விட்டுட்டு போனா நம்ம தொழிலுக்கே துரோகம் செய்ற மாதிரி. உயிர் போனா போகட்டும். நம்மளால முடிஞ்சத செய்வோம்" என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் செட்டியார் வீட்டுக்குத் திரும்பினான். காலை நேரம் என்றாலும் மறுபடியும் ஏதோ இருள் கவ்வியது போன்றே இருந்தது அந்நேரம். மேலே அந்நாந்து பார்த்தவன் 'கிளைமேட் கூட பயமுறுத்துகிற மாதிரி இருக்கிறதே' என்று முனங்கிக் கொண்டே சென்றான். சிறிதுநேரத்திலேயே வீடும் மாறுதலுக்கு உட்பட்டு ஏதோ விகாரமாக காட்சியளித்தது அப்போது. அது மேலும் பயத்தை அதிகப்படுத்தியிருந்தது அவனுக்கு. சிறிது கலக்கத்தோடு 'ஆத்தா ஜக்கம்மா நீதான் தாயி காப்பா