Posts

Showing posts from July, 2018

தெரு நாய்

அன்று ஒரு நாள் கனமழை சென்னையில். சென்னையே மிதந்தது அந்த கொடூர மழையில். ஆம் கொடூர மழைதான் மனிதர்கள் உயிரிழந்தால் அதன் பெயர் அதானே. அந்த கொடூர மழையிலும் தன் குட்டிகளை ஈன்றது ஒரு தெரு நாய். விடாத மழையிலும் வேறு வழி இல்லை ஈன்றே ஆக வேண்டும். ஐந்து குட்டிகளை ஈன்றது. அதற்கு தெரியவில்லை சிறிது நேரத்தில் ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்று... தெரு நாயின் முன் வாழ்க்கை: சென்னை பிரதான நகரில் அது பிறந்தது தனது 4 சகோதர சகோதரிகளுடன் தன் தாயான ஒரு தெரு நாய்க்கு. பிரதான நகரில் வசித்ததால் உணவுக்கோ தங்குமிடத்துக்கோ பஞ்சமில்லை. அந்த குட்டிகளை பார்க்கும் போதெல்லாம் அந்த ஏரியா மக்களுக்கு ஏகப்பட்ட சந்தோசம் அவற்றின் விளையாட்டுகளை ரசிக்கும் போது. சிலர் பிஸ்கெட் பால் சாப்பாடு என்று சிறுவர்முதல் பெரியவர் வரை அனைவரும் அன்போடு கொடுத்தார்கள். தாயும் தன் பங்குக்கு கறிகடைகளில் இருந்து குப்பையில் கொட்டப்படும் குடல் இதற பலவற்றை தன் குட்டிகளுக்கு கொண்டு வந்தது.               இப்படியே சில நாட்கள் கடக்க ஒரு ஆண் குட்டியை அங்கு வசித்த குடும்பத்தின் ஒரு சிறுவன் தாய் நாய் வருவதற்கு முன் அதை கவர்ந்து சென்றான். அந்த சம்பவம் நிக