தெரு நாய்

அன்று ஒரு நாள் கனமழை சென்னையில். சென்னையே மிதந்தது அந்த கொடூர மழையில். ஆம் கொடூர மழைதான் மனிதர்கள் உயிரிழந்தால் அதன் பெயர் அதானே. அந்த கொடூர மழையிலும் தன் குட்டிகளை ஈன்றது ஒரு தெரு நாய். விடாத மழையிலும் வேறு வழி இல்லை ஈன்றே ஆக வேண்டும். ஐந்து குட்டிகளை ஈன்றது. அதற்கு தெரியவில்லை சிறிது நேரத்தில் ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்று...

தெரு நாயின் முன் வாழ்க்கை: சென்னை பிரதான நகரில் அது பிறந்தது தனது 4 சகோதர சகோதரிகளுடன் தன் தாயான ஒரு தெரு நாய்க்கு. பிரதான நகரில் வசித்ததால் உணவுக்கோ தங்குமிடத்துக்கோ பஞ்சமில்லை. அந்த குட்டிகளை பார்க்கும் போதெல்லாம் அந்த ஏரியா மக்களுக்கு ஏகப்பட்ட சந்தோசம் அவற்றின் விளையாட்டுகளை ரசிக்கும் போது. சிலர் பிஸ்கெட் பால் சாப்பாடு என்று சிறுவர்முதல் பெரியவர் வரை அனைவரும் அன்போடு கொடுத்தார்கள். தாயும் தன் பங்குக்கு கறிகடைகளில் இருந்து குப்பையில் கொட்டப்படும் குடல் இதற பலவற்றை தன் குட்டிகளுக்கு கொண்டு வந்தது.

              இப்படியே சில நாட்கள் கடக்க ஒரு ஆண் குட்டியை அங்கு வசித்த குடும்பத்தின் ஒரு சிறுவன் தாய் நாய் வருவதற்கு முன் அதை கவர்ந்து சென்றான். அந்த சம்பவம் நிகழும் போது மற்ற நாய்க்குட்டிகள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவனுடன் கொஞ்சி விளையாடின. அவனோ அதை தன் ஸ்கூல் பேக்கில் போட்டு தன் வீட்டுக்கு எடுத்து சென்றான். அவன் பெற்றோர்களோ அதை ஏற்கவில்லை. ஆனால் அவன் பிடிவாதத்தால் வேறு வழியின்றி ஏற்றனர்.

சிறிது நேரத்தில் வந்து சேர்ந்த தாய் நாய் ஆண் குட்டியை காணாமல் அங்கும் இங்கும் பரிதவித்தது. ஆனால் அதற்கு யார் புரியவைக்க முடியும். சில நாட்கள் ஆசுவாசமாகி பழைய நிலைக்கு திரும்பி மற்ற குட்டிகளுடன் வாழத்தொடங்கியது. வேறென்ன செய்ய முடியும் அந்த  தாய் நாயால். அதேற்கென முறையிட காவல்நிலையமா இருக்கிறது புகார் அளிக்க. அதான் பழைய நிலைக்கு காரணம். மற்ற மூன்று குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது.
      மனிதன் புத்திதான் தெரியுமே, பெட்டைகள் என்பதால் அவற்றை களவாட எந்தவொரு பெற்றோரும் குழந்தைகளை அனுமதிக்கவில்லை. குழந்தைகளுக்கு ஏது வித்தியாசம் ஆண் பெண் குட்டி என்று. அதையும் மீறி ஒரு சிறுவன் ஒன்றை களவாட முயன்ற போது,தாய் நாய் அதை கண்டுபுடிக்க அவனை கடிக்க முயன்றது.  ஆம் லேசாக கீறல்கள் அவன் மேல் விழுந்தது.
                     அதில் பயந்த அவன் அழுதுகொண்டே வீட்டுக்கு செல்ல அவன் பெற்றோர்களின் கோபத்தால் அந்த தாய் நாயின் முடிவு நாள் குறிங்கப்பட்டது அவர்களால். விடிந்தும் விடியாததுமாக பழைய பிரியாணியில் எலிமருந்து விசம் கலந்து அந்த தாய் நாய்க்கு கொடுக்க முடிவு செய்தார்கள்.பொழுதும் விடிந்தது.
           
     தாய் நாய் உணவுக்காக அலைந்த போது அவர்கள் அந்த விச பிரியாணியை கொண்டு வந்தார்கள் அதற்கு கொடுக்க அதன் வாழுமிடத்துக்கு. அதுவும் வாலை ஆட்டிக்கொண்டு இந்த படுகொலையை உணராத, தன் குட்டிகளை பிரிய போகிற தருணத்தை உணராமல் வவ் வவ் என்று குரைத்தது தன் குட்டிகளை அழைக்கும் நோக்கத்தில். அதன் குட்டிகளோ விபரீதத்தை உணர்ந்ததோ என்னவோ தன் தாயின் அழைப்புக்கு செவி கொடுக்காமல் விளையாடிக் கொண்டிருந்தது.
          பசியின் மயக்கத்தில் இருந்த தாய் அவர்கள் கொடுத்த பிரியானியை நன்றியுடன் வாலை ஆட்டிவிட்டு உண்ணத்தொடங்கியது. இதை ஏதும் அறியாத காயம் வாங்கிய சிறுவனோ அந்த தாய் நாயை தடவி கொடுத்தான். அவன் பெற்றோர் சரி சரி வாங்க போவோம் என்று விடாப்பிடியாய் அந்த சிறுவனை அழைத்து சென்றார்கள். அந்த தாய் நாய் அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் கால்வாசியை உண்டு முடித்து தள்ளாட தொடங்கியது.
    இதையறியாத ஒரு குட்டிக்கு பசி எடுக்க விளையாடுவதை விடுத்து தன் தாயை நோக்கி ஓடி வந்தது. குட்டியோ தாயின் வலி புரியாமல் அது தள்ளாடுவதை விளையாட்டாக நினைத்து அதனுடன் விளையாடத் தொடங்கியது. தாய் நாயோ வலியால் துடிக்க அது விளையாட்டாக தெரிந்தது குட்டிக்கு. அந்த குட்டிக்கு புரியவைக்க முடியவில்லை அது விசம் என்று உணர்த்த. சில நொடிகளில் தாய் நாய் சுருண்டு விழ குட்டியோ அதை உணராமல் விளையாடிவிட்டு பால் குடிக்க முற்பட்டது.
 
  அதன் தாய் இறந்தது தெரியாமல் பிரியாணியை நோக்கி நகர்ந்தது. ஆம் அதன் வாழ்வும் முடிந்தது.இதை உணராத மற்ற இரண்டு குட்டிகள் விளையாட்டில் மும்முரமாகி ஒன்றை மற்றொன்று விரட்ட அது ரோடை கடக்க முயல , அப்போது அதிவேகமாக வந்த ஒரு இளைஞனின் பைக்கால் உடல் நசுங்கி உயிரை இழந்தது விரட்டப்பட்ட குட்டி.  அவனோ பைக்கை நிறுத்தாமல் அதைவிட  அதிவேகமாக கடந்தான் அந்த இடத்தை. விரட்டிவந்த குட்டிக்கு அதன் சகோதரியின் நிலைமையை உணர்ந்ததோ இல்லையோ அதன் நசுக்கப்பட்ட உடம்பை சுற்றி சுற்றி வந்தது. நாக்கால் தடவியது. காலால் உதைத்தது. மக்களோ கடந்து சென்றார்கள் சர்வசாதாரணமாக. அதன் உயிரை துச்சமாக. ஆனால் அதற்கோ பேரிழப்பு புரிந்ததோ இல்லையோ தெரியவில்லை. முயற்சித்து பார்த்தது அதை எழுப்ப. ஆனால் முடியவில்லை. விலங்குகளின் உயிர்க்கு ஏது மதிப்பு அதன் தசைகளுக்குதானே மதிப்பு.
        முயற்சிகள் வீணாக தன் தாயை பார்க்க சென்றது. அதற்கு எவ்வாறு புரியவைக்க அதுவும் யார் புரியவைப்பார் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்று. தன் தாயை சுத்தி சுத்தி வந்தது. தன் சகோதரியையும். களைப்பாக தன் தாயில் மார்பில் பால் குடிக்க முற்பட்டது. பால் குடித்ததோ இல்லையோ தெரியவில்லை. சிலர் வந்தனர் அந்த இறந்த தாய் நாயை தரதரவென்று இழுத்து சென்றனர் அதன் இறந்த சகோதரியையும் ஒரு சாக்குபையில். அந்த நாய்குட்டி ஓடிவந்தது தன் தாயை எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்ற எண்ணத்துடன்.

    சிலர் அந்த குட்டியின் வலி தெரியாமல் ஒரு குச்சியால் அடித்து விரட்டிவிட்டனர் தூரமாக. அன்று ஓடியதுதான் நம் தற்போதைய தெருநாய் இன்று தன் குட்டிகளுடன்.
சென்னை முழுவதும் நீரால் மூழ்கி இருக்க யார் உணரப்போகிறார்கள் இந்த தாயின் வலியை.
     மனிதர்களுக்கே பொட்டலங்கள் பத்தாத வேலையில். ஏழைகளோ தன் இருப்பிடத்தை இழந்து தவிக்கும் வேளையில் யார் உணர்வார் இந்த தெருநாயின் தாய்மை வலியை. எங்கோ சென்று சிறிது அழுகி வீசப்பட்ட கோழியின் இறைச்சியை கொண்டுவந்து தின்றது. குட்டிகளை ஒரு மாடி வீட்டின் படிகளுக்கு கீழ் ஒவ்வொன்றாக கொண்டு வந்து விட்டது. அதற்கு என்ன தெரியும் இந்த மனித பதர்கள் ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடு என்று.
      அங்கும் சிறிது சிறிதாக நீர் வரத்தொடங்கியது. வேறு இடம் பார்க்க சென்றது. நேரம் குறுகிய நிலையில். திடீரென்று செம்பரபாக்கம் ஏரியை திறந்து விட ஏரியாவோ வெள்ளக்காடானது. அதில் அடித்து செல்லப்பட்டது தற்போதைய தாய் நாய். ஆகா தன் குட்டிகளின் நிலைமை அய்யோ என்று கதறுவதற்குள் அடித்து செல்லப்பட்டது ஏரியின் வேகத்தில். பிறந்த குட்டிகள் அனைத்தும் சில நிமிடங்களில் நீரால்அடித்து செல்லப்பட்டு வெவ்வேறு திசைகளில் பிணங்களாக மிதந்தது. தாய் நாய் எப்படியோ முயன்று தன் இருப்பிடத்துக்கு வந்து போது முழுவதும் நீரால் சூழப்பட்டு இருந்தது. தன் குட்டிகள் இறந்திருக்க கூடும் என்று நினைத்ததோ என்னவோ நீந்து மறுபுறம் கடக்க முயன்றபோதே அந்த பக்கம் வந்த நீரால் கரடுமுரடாக அடித்து செல்லப்பட்டு எங்கோ ஒரு இடத்தில் தஞ்சம் அடைந்தது. குட்டிகளை ஈன்ற காயம் வலி கூட மறையாத சூழலில் அதன் குட்டிகளை இழந்ததில் வருத்தம் கூடியதால் மனிதர்கள் தஞ்சம் அடைந்த இடத்தில் தனக்கென கிடைத்த ஈரமான இடத்தில் தங்கியது.
      இரண்டுமூன்று நாட்கள் ஆகியதால் நீரும் வடியாததால் நோயும் தொற்றியது. ஏது செய்ய முடியும். எதுவும் முடியாது. மனிதர்களே உணவுக்கு அலைந்த நேரத்தில் அவர்களுக்கு கிடைத்த பொட்டலத்தில் இதற்கு உணவு தர யாரும் தயாராக இல்லை. அடித்து விரட்டினார்கள். அரசோ மனிதர்களுக்கு தானே உணவை தயார் செய்தது. விலங்குகளுக்கு இல்லையே. இரண்டு நாட்களாக உணவுக்கு அலைந்து நொந்த நேரத்தில், ஓருவர் உண்பதை பார்த்த இது அவரை நோக்கி வாலை ஆட்டி நின்றது. அவரோ நாயின் உடலை நோக்கிய அவர் அதன் நொடிந்த தேகத்தை உணர்ந்ததால் தான் பெற்ற உணவின் பாதியை அதற்கு அளித்து அதன் உயிரை காத்தார். அப்போதைக்கு. இருந்தும் மற்ற நேரங்களில் எங்கும் உணவு கிடைக்காததால் பட்டினியோடு அலைந்தது.
                      இப்படியே உணவை தேடி அலைந்து கிடைக்காததால் வெவ்வேறு ஏரியாக்களுக்கு சென்று நார்மல் நிலை திரும்பினாலும் அங்கு திரிந்த ஆண் நாய்கள் தன்னை புணர வருவதை உணர்ந்து காயம் ஆறாத நிலையிலும் எவ்வாறு புரிய வைப்பது அவைகளுக்கு. இதனால் உணவு இன்றி மூன்றுநான்கு ஆண் நாய்களால் துறத்துப்பட்டுகிட்டே இருந்தது. அப்போது நடந்த காமச்சண்டையில் இதன் மூக்கு கிழிந்து இரத்தம் வடிந்தது. மருத்துவரும் இல்லை அதை சரிப்படுத்த. நாட்கள் செல்ல செல்ல அந்த காயம் ஆறாமல் புழுவதும் உருவாகியது இலவச இணைப்பாக.
  வலி தாங்கமுடியாமல் நாட்கள் கடத்த நாடுமாறியாக.எங்கோ நடந்த திருமண விழாவில் வாழை இலைகளுடன் மிஞ்சிய உணவுகள் கிடைக்க, அதையும் உண்ண இயலாத அளவிற்கு மற்ற நாய்கள் அதனுடன் சண்டையிட்டு அதற்கு படுகாயங்களை ஏற்படுத்த. குத்துயிரும் குலைஉயிருமாக நடமாடியது. எங்கோ கிடைத்த உணவை உண்டு தொடர்ந்தது தன் வாழ்வை சில காலம்.
   பேய் மழைத்தண்ணீரும் மற்ற கார்ப்பரேட்டுகளால் உறியப்பட, அனைத்து குளம் குட்டைகள் வற்றியது. உணவுக்கு பஞ்சம் ஏன்பது தற்போது நீருக்கே  பஞ்சமானது. எங்கு பார்த்தாலும் சாக்கடை மட்டுமே. வெயில் காலத்தில் அதில் உருண்டு சூட்டை தணித்தது. ஆயினும் காயங்கள் புழுக்களால் அழுக, கொடூர வலியை ஏற்படுத்த தாங்க முடியாமல் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கியது. முடி உதிர்ந்த சொரி நாயைப்போல் காட்சி அளித்தது. மற்ற நாய்கள் நடமாடும்போது குரைத்ததை மாமிச மனிதர்கள் தங்களைத்தான் குரைப்பதாக எண்ணி மாநகராட்சிக்கு மென்ட்டல் நாய் என்று தெரிவிக்க. மாநகராட்சியும் அதை பிடிக்க துரத்தியபோது தன்னைத்தான் கொல்லப்போகிறார்கள் என்ற பயத்தில் வேகமாக ஓடி எக்ஸ்பிரஸ் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக 3மணி நேரத்தில் சேலத்தை அடைய முற்பட்ட வாகனத்தில் அடிபட்டு தூக்கி எறியப்பட்டது மறு சைடு ரோடில். அதே நேரம் வந்த லாரியால் குற்றுயிரும் சுபமாக முடிக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டது...... முற்றும்
      
         
                   
                 

Comments

  1. Azhugaya varuthu man. Awsm.. 😢👏👏👏

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி..எழுத்தாளினி..🙏🙏

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. கதை நன்று. அதைவிட அது எழுதப்பட்டுள்ள மொழிநடை கதைக்கு ஏற்றதாக இருப்பது கண்டு மகிழ்ச்சி.


    இது இப்படியிருக்க உங்களின் டுவிட்டர் மொழிநடை ஏன் சிதைந்த பேச்சு மொழியில் இருக்கச் செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதையும் கொஞ்சம் மாற்றி எழுதிப் பாருங்களேன்.

    கதாசிரியர் மற்றும் டிவிட்டர் விற்பன்னருமான உங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். வாழ்க வளர்க தங்களின் அரிய முயற்சிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. டிவிட்டர் நடை பேச்சு வழக்கில் இருந்தால் கொஞ்சம் ஈசியாக சென்றடையும்..
      அதான்.. மாற்றுகிறேன்..🙏

      Delete

Post a Comment

Popular posts from this blog

அய்யாவு

கனகவள்ளி - 3

துரோகமா! சாபமா!