தெரு நாய் - மறுபதிப்பு.
அன்று கனமழை சென்னையில். அதனால் சென்னையே மிதந்தது அந்த கொடூர மழையில். அந்த மழையிலும் தன் குட்டிகளை ஈன்றது ஒரு தெரு நாய். விடாத மழையிலும் வேறு வழி இல்லை ஈன்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அழகான ஐந்துக் குட்டிகளை ஈன்றது அது. தான் ஈன்ற குட்டிகளை வலியையும் பொருட்படுத்தாமல், தன் நாக்கால் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது, சிறிது நேரத்தில் ஒரு பேராபத்து வரப்போவதை உணராமல். குட்டிகளின் ஈனக்குரல்களும் அதற்கு ஒரு சுகத்தை கொடுத்திருக்க வேண்டும் அந்த கனமழையிலும் வலியைத் தாங்க. தெரு நாயின் கடந்தகாலம்: சென்னை பிரதான நகரில் அது பிறந்தது, தனது 4 சகோதர சகோதரிகளுடன் தன் தாயான ஒரு தெரு நாய்க்கு. பிரதான நகரில் வசித்ததால் உணவுக்கோ தங்குமிடத்துக்கோ பஞ்சமில்லை. அந்தக் குட்டிகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்தப் பகுதி மக்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ஏனெனில் அவைகளுக்குள் விளையாடுக்கொள்ளும் விதம் அவர்களின் மனதைக் கவரந்திருந்தது. அவர்களில் சிலர் அவைகளுக்கு பிஸ்கெட், பால், சாப்பாடு என்று சிறுவர்முதல் பெரியவர் வரை அனைவரும் அன்போடு கொடுப்பது வாடிக்கை. அவைகளின் தாயும் தன் பங்குக்கு கறிக்கடைகளில்