அறன்
கடும் மழை அனைத்து வீடுகளையும் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது சில நொடிப்பொழுதை பகல் போல் காட்டும் மின்னலோடும் தொடர்ந்த இடி முழக்கத்தோடும். இரவு 9 மணி ஆனதாலும், மழையாலும் பாரதி தெருவில் மனித நடமாற்றமற்று நடுஇரவைப்போல் அமைதியில் காட்சியளித்தது. அந்த மழையிலும் வண்டியிலிருந்து விறு விறு என்று இறங்கிய ஒருவன் நேராக விளக்கு அணையாமல் இருந்த சிறிய வீட்டை நோக்கி ஓடினான். சாத்தப்பட்டிருந்த கேட்டை திறந்து வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய ஆக்டிவாவையும், அபாச்சி பைக்கையும் நோட்டமிட்டபடி சென்று கதவை மூன்று முறை தட்டினான். சத்தம் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து வந்த 55 வயது மதிப்புடைய ஒருவர் கதவைத் திறந்ததும், வந்திருக்கிறவர் காவலர் என்று தெரிந்ததும் சிறிது படபடப்பில் "சார் நீங்க? " என்று கேட்க, வந்திருந்தவரோ "ராகவன் இருக்காரா?" என்று கேட்டுவிட்டு "நீங்கள் என்ன வேணும் ராகவனுக்கு?"என்று கேட்டார் காவலர். "நான் ராகவனின் அப்பா ராஜன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு "என்ன சார்? ஏதும் பிரச்சனையா?" என்று காவலரிடம் கேட்டார். "ஒன்னுமில்லை. ஐயா