Posts

Showing posts from October, 2018

அறன்

Image
கடும் மழை அனைத்து வீடுகளையும் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது சில நொடிப்பொழுதை பகல் போல் காட்டும் மின்னலோடும் தொடர்ந்த இடி முழக்கத்தோடும். இரவு 9 மணி ஆனதாலும், மழைய...

ஞாநி

Image
சென்னையின் அதிகாலை பரபரப்பில் கதிரவன் மனதில் எந்தவிதமான சலனமுமின்றி, காலை உடற்பயிற்சிக்காக தன் வீட்டின் அருகில் உள்ள பூங்காவிற்கு நடந்து சென்று கொண்டிருந்தான். முப்பத்தைந்து வயதை எட்டியிருந்தவன் அவனது கட்டுக்கோப்பான உணவுப்பழக்கங்களால் இருபத்தைந்து இளைஞனாகவே காணப்பட்டான். இளங்காலையின் தென்றல்காற்றும், எழத் துடித்துக்கொண்டிருந்த கதிரவனின் இதமான வெப்பமும் அவனை தழுவிக் கொண்டிருந்தது. கதிரவன் நடைபயிற்சிக்கே உரிய நடையில் சென்று கொண்டிருந்தாலும் தன் கண்களை அங்குமிங்கும் மேயவிட்டான். ஆம், அன்று காலையில் அவன் தினமும் காணும் நண்பர்கள் இன்று காணவில்லை. ஒருவரல்ல இருவரல்ல ஆறு பேர். "ஒருத்தர் கூட காணவில்லையே, எங்கே?" என்று சுற்றி சுற்றி பார்த்தவன், தன்னை நோக்கி ஒருவர் வருவதைப் பார்த்தான். அவர் தெரிந்த முகமே... கமல் என்று கதிரவன் மனதுக்குள் நினைத்தான். ஏனெனில் கதிரவன் அதிக சொற்களை பயன்படுத்துவதில்லை. அவனது முக்கால்வாசி பதில்கள் ஓரிரு சொற்களில் முடிந்துவிடும். அதனாலேயே கதிரவனை நேசிக்கிறவர்கள் பலர் உண்டு. கதிரவனின் அருகில் வந்த கமல் "சார், நேத்து எல்லாரையும் புடிச்சிகிட்டு போய்டாங...

விழா

Image
"பூவண்ணா ! பூவண்ணா!" "டேய் ! பூவண்ணா!" குரல் கேட்டபடி இருந்தது...   __×__ "என்ன மச்சான்... ஒரே தடபுடலா இருக்கு. திருவிழா விருந்தோ?" என்றான் பூவண்ணன். "வாப்பா பூவண்ணா! தங்கச்சியும் மச்சானும் வந்திருக்காக, திருவிழாக்கு. அதான் ஒரு சேவ, ஒரு கோழினு." கையில் இருந்த உயிர்க்கோழிகளைத் தூக்கிக் காட்டிய பாலு தொடர்ந்தான். "போன தவணை தான் மழையுமில்லை மண்ணுமில்லை. ஒன்னும் பண்ணமுடியாம போச்சு. இந்த வர்சம் கடவுள் கண்ண தொறந்திருக்காப்ல. அதான். அப்ப்ப சந்தோசத்தை அப்பப்ப அடைஞ்சிடனும்டா பூவண்ணா...!" "ஆமா... இந்த  முறை வானம் கொஞ்சம்  மனசு இறங்கிருக்கு.. இல்லனா. கஸ்டந்தான் மச்சான்." "இந்த வர்சம் கொஞ்ச மழைக்கே நல்லா பச்சப் பசேல்னு இருக்கு. அடுத்த முறையும் இதே மாதிரி பேஞ்சா களைகட்டிரும். பூவண்ணா! எல்லா நம்ம நேரந்தாண்டா. மழை வரும். துட்டு வரும். திருவிழாவ ஜெகஜோதியா கொண்டாடுவோம் அடுத்த வர்சமும்." கையில் இருந்த காசினை எண்ணியபடி வந்த ஊர்த்தலைவரைப் பார்த்த பூவண்ணன், "என்ன தலைவரே... கணக்குபுள்ளயா மாறிட்டீக போல...?" எனக் கூற, ...

கடவுளடி சேர்ந்தார்க்கு துன்பம் ஏது!

"யோவ் பெரிசு வந்துட்டியா. மறுபடியும் எவ்ளோ திட்டினாலும் அசிங்கப்படுத்தி கஸ்டம் கொடுத்தாலும் கேட்க மாட்ட போல , நான் காசு கொடுத்து ரோட் காண்ட்ராக்ட் எடுக்கிறேன் அத...