சென்னையின் அதிகாலை பரபரப்பில் கதிரவன் மனதில் எந்தவிதமான சலனமுமின்றி, காலை உடற்பயிற்சிக்காக தன் வீட்டின் அருகில் உள்ள பூங்காவிற்கு நடந்து சென்று கொண்டிருந்தான். முப்பத்தைந்து வயதை எட்டியிருந்தவன் அவனது கட்டுக்கோப்பான உணவுப்பழக்கங்களால் இருபத்தைந்து இளைஞனாகவே காணப்பட்டான். இளங்காலையின் தென்றல்காற்றும், எழத் துடித்துக்கொண்டிருந்த கதிரவனின் இதமான வெப்பமும் அவனை தழுவிக் கொண்டிருந்தது. கதிரவன் நடைபயிற்சிக்கே உரிய நடையில் சென்று கொண்டிருந்தாலும் தன் கண்களை அங்குமிங்கும் மேயவிட்டான். ஆம், அன்று காலையில் அவன் தினமும் காணும் நண்பர்கள் இன்று காணவில்லை. ஒருவரல்ல இருவரல்ல ஆறு பேர். "ஒருத்தர் கூட காணவில்லையே, எங்கே?" என்று சுற்றி சுற்றி பார்த்தவன், தன்னை நோக்கி ஒருவர் வருவதைப் பார்த்தான். அவர் தெரிந்த முகமே... கமல் என்று கதிரவன் மனதுக்குள் நினைத்தான். ஏனெனில் கதிரவன் அதிக சொற்களை பயன்படுத்துவதில்லை. அவனது முக்கால்வாசி பதில்கள் ஓரிரு சொற்களில் முடிந்துவிடும். அதனாலேயே கதிரவனை நேசிக்கிறவர்கள் பலர் உண்டு. கதிரவனின் அருகில் வந்த கமல் "சார், நேத்து எல்லாரையும் புடிச்சிகிட்டு போய்டாங...